Published : 22 Nov 2014 01:07 PM
Last Updated : 22 Nov 2014 01:07 PM
சிவசேனா எப்போதும் எங்கள் நண்பன் தான், இனியும் அந்த கட்சியுடனான நட்பு தொடரம் என்ற நம்பிக்கை இருப்பதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் செய்தியாளர்கள் சிவசேனா உடனான கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த பட்னாவிஸ், "சிவசேனாவுடன் எங்களுக்கு (பாஜக) ஆழமான நட்பு என்றுமே உள்ளது. இந்த நட்பு எதிர்காலத்திலும் தொடரும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT