மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிமுக, திமுக கோரிக்கை

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிமுக, திமுக கோரிக்கை
Updated on
1 min read

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக, திமுக உறுப்பினர் கள் கோரிக்கை வைத்தனர்.

அதிமுக உறுப்பினர் விஜிலா சத்யானந்த், மாநிலங்களவையில் நேற்று இந்தப் பிரச்சினையை எழுப்பினார். அப்போது அவர் பேசும்போது, “கடந்த 15-ம் தேதி இலங்கை கடற்படை 4 தமிழக மீன வர்களை கைது செய்தது. இது மீனவர்களின் உரிமையை மீறும் செயல். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வும் அவர்களது படகுகளை மீட்க வும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவ காரத்தில் வெளியுறவு அமைச் சகம் உடனடியாக தலையிட வேண்டும்” என்றார்.

இதையடுத்து திமுக உறுப் பினர் திருச்சி சிவா பேசும் போது, “தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அடக்குமுறை தொடர்கிறது. சமீபத்தில் இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்த 76 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத் துடன், அவர்களது படகுகளை யும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைதான மீனவர் களை விடுதலை செய்யவும் அவர் களது படகுகளை மீட்கவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

எம்பி.க்கள் ஊதிய உயர்வு

மாநிலங்களவையில் சமாஜ் வாதி உறுப்பினர் நரேஷ் அகர்வால் பேசும்போது, ‘‘மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதிய குழுவின் பரிந்துரை அமல்படுத்தப் பட்டு விட்டது. இதேபோல் நாடாளு மன்ற எம்பிக்களுக்கான யோகி ஆதித்யநாத் குழுவின் பரிந்துரை யையும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்குழுவின் அறிக்கையை ஆராய அமைச்சர் கள் குழுவை அமைத்திருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். அதற் கான அவசியம் ஏன் எழுந்தது என தெரியவில்லை. எனவே ஆதித்ய நாத் குழுவின் அறிக்கையை உட னடியாக அவையில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்றார்.

இதற்கு அவையில் இருந்த சில உறுப்பினர்களும் ஆதரவாக குரல் எழுப்பினர். அப்போது குறுக்கிட்ட துணைத் தலைவர் பி.ஜே.குரியன், ‘‘இது பற்றி அரசு தான் பரிசீலிக்க வேண்டும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in