Last Updated : 26 Jul, 2016 12:03 PM

 

Published : 26 Jul 2016 12:03 PM
Last Updated : 26 Jul 2016 12:03 PM

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வலுவான சட்டங்கள் தேவை: கனிமொழி

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க வலுவான சட்டங்கள் தேவை என மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேசினார்.

டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 4 வயது பெண் குழந்தையை அவரது அண்டை வீட்டைச் சேர்ந்தவர் பாலியல் பலாத்காரம் செய்தார். பாதிக்கப்பட்ட அச்சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி மாநிலங்களவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பேசிய திமுக எம்.பி. கனிமொழி, "சிறுமிகள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சம்பவங்களைத் தடுக்க குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்புச் சட்டங்களை வலுவாக்க வேண்டும்" என்றார்.

கனிமொழியைத் தொடர்ந்து பேசிய ஜெயா பச்சனும் இதே கருத்தை வலியுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x