Last Updated : 01 Nov, 2014 01:09 PM

 

Published : 01 Nov 2014 01:09 PM
Last Updated : 01 Nov 2014 01:09 PM

பாஜக உறுப்பினர் அடையாளத்தை புதுப்பித்தார் மோடி

பாஜக-வின் தேசிய உறுப்பினர் சேர்க்கை இன்று துவங்கியது. பிரதமர் மோடி தனது உறுப்பினர் அடையாள அட்டையை புதுப்பித்துக் கொண்டார்.

பாஜக தேசிய உறுப்பினர் சேர்க்கை நாடு முழுவதிலும் இன்று (சனிக்கிழமை) துவங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தனது உறுப்பினர் அடையாள அட்டையை புதுப்பித்து தன்னை கட்சியின் முதல் தேசிய உறுப்பினராக மீண்டும் இணைத்து கொண்டார்.

2015-ஆம் ஆண்டின் மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை நடக்க உள்ள இந்த உறுப்பினர் சேர்க்கையில், பாஜக-வின் உறுப்பினர்களில் எண்ணிக்கையை 4 மடங்காக உயர்த்த வேண்டும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த உறுப்பினர் சேர்க்கை ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு உறுப்பினர்கள் புதுப்பிக்கும் பணியை ஆன்-லைன் மூலம் மேற்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x