Published : 24 Sep 2016 08:53 AM
Last Updated : 24 Sep 2016 08:53 AM
அசாமில் கடந்த 2010-ல் உருவான கர்பி மக்கள் விடுதலைப் புலிகள் தீவிரவாத அமைப்பு, அடர்ந்த வனப்பகுதிகளில் பதுங்கியபடி பல்வேறு சதிச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
போக்கஜான் வனப்பகுதிக்குட்பட்ட பனிபாதர் என்ற பகுதியில் அந்த அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்து தீவிரவாதிகளை கைது செய்ய முயன்றனர். அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் சிலர் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் சண்டை நடைபெற்றது. இறுதியில் அந்த அமைப்பின் 2 தலைவர்கள் உட்பட 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படை தரப்பில் ஒருவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். தீவிர வாதிகள் பதுங்கி இருந்த இடத்தில் இருந்து துப்பாக்கிகள், வெடி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங் களையும் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT