Last Updated : 27 Feb, 2017 09:44 AM

 

Published : 27 Feb 2017 09:44 AM
Last Updated : 27 Feb 2017 09:44 AM

தேவாலயம் சென்றபோது மேகாலயாவில் சாலை விபத்து: 16 பேர் பரிதாப மரணம்

மேகாலயாவில் லாரி ஒன்று சாலை தடுப்பில் மோதியதில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேகாலயா மாநிலம் மேற்கு காசி ஹில்ஸ் மாவட்டத் தலை நகர் நாங்ஸ்டோன். இங்கிருந்து 11 கி.மீ. தூரத்தில் உள்ளது ஜோக்ரோ கிராமம். இந்த கிராமத்தின் நெடுஞ் சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 60-க்கும் மேற்பட்டோர் தேவாலயத்துக்குச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென கான்கிரீட் சாலை தடுப்பில் லாரி வேகமாக மோதியது. இதில் சம்பவ இடத்தில் 12 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனையில் 4 பேர் இறந்தனர். இறந்தவர்களில் 9 பேர் பெண்கள் மற்றும் 13 வயது சிறுமியும் அடங்குவர். லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளர் காயத்துடன் உயிர்த் தப்பினர்.

இந்த விபத்தில் 50 பேர் படு காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப் பட்டுள்ளனர். அவர்களில் பல ருடைய உடல்நிலை கவலைக்கிட மாக உள்ளது. இதனால் பலி எண் ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது என்று மாவட்ட போலீஸ் தலைவர் சில்வஸ்டர் நாங்ஜெர் தெரிவித்தார்.

முதல்கட்ட விசாரணையில் அதிவேகமாக லாரி ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x