Published : 13 Aug 2016 04:13 PM
Last Updated : 13 Aug 2016 04:13 PM
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று (சனிக்கிழமை) சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் யி சந்தித்தார்.
இருநாடுகளுக்கும் இடையேயான பல்வேறு விவகாரங்கள் குறித்து வெளியுறவு மட்டப் பேச்சுவார்த்தைக்காக வாங் இந்தியா வந்துள்ளார்.
இந்நிலையில் தனது பயணத்தின் ஒரு பகுதியாக அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். முன்னதாக அவர் கோவா மாநிலத்துக்குச் சென்றார். கோவாவில் வரும் அக்டோபர் மாதம் பிரிக்ஸ் மாநாடு நடைபெறுகிறது. அதில் சீன அதிபர் ஜி ஜிங்பிங் பங்கேற்கிறார். அதனையொட்டி கோவா மாநிலத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்.
சீன வெளியுறவு அமைச்சர் மேற்கொண்டுள்ள இந்த பயணத்தின்போது என்.எஸ்.ஜி., தெற்கு சீன கடல் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT