Published : 22 Jan 2017 12:03 PM
Last Updated : 22 Jan 2017 12:03 PM
உத்தரப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக எழுந்துள்ள புகார் குறித்து விளக்கம் அளிக்குமாறு மாநில அமைச்சருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் ஆதரவாளரும் அமைச்சருமான காயத்ரி பிரசாத் பிரஜாபதி, அமேதி பகுதி வாக்காளர்களுக்கு சுமார் 4 ஆயிரம் புடவைகளை வழங்க திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பதேபூர் மாவட்ட ஆட்சியர் தேர்தல் ஆணையத்துக்கு ஓர் அறிக்கை அனுப்பி உள்ளார்.
இதன் அடிப்படையில், “வாக்காளர்களுக்கு லஞ்சம் தர முயன்றதாக உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது குறித்து வரும் 23-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என பிரஜாபதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT