Published : 17 Feb 2016 02:14 PM
Last Updated : 17 Feb 2016 02:14 PM

ஜேஎன்யூ பிரச்சினை: கடும் கெடுபிடிகளுக்கு இடையே டெல்லி நீதிமன்றத்தில் கண்ணய்ய குமார் ஆஜர்

ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமார் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

முன்னதாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உச்ச நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்தது.

வெளிநபர்கள் நீதிமன்றத்துக்குள் நுழைய தடை:

வழக்கு விசாரணையின்போது, அரசு தரப்பு மற்றும் கண்ணய்யா குமார் வழக்கறிஞர்களைத் தவிர வேறு யாருக்கும் நீதிமன்றத்துக்குள் அனுமதி இல்லை.

குற்றஞ்சாட்டப்பட்டவர் குடும்பத்தினர் தர்ப்பில் இருவர் அல்லது ஜேஎன்யூ ஆசிரியர்கள் சார்பில் ஒருவர், ஒரு மாணவர், 5 பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அனுமதி போன்ற நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.

கடந்த முறை கண்ணய்யா குமார் உட்பட மூவரும் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, நீதிமன்ற வளாகத்தில் மாணவர்கள், பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x