Last Updated : 28 Dec, 2014 04:06 PM

 

Published : 28 Dec 2014 04:06 PM
Last Updated : 28 Dec 2014 04:06 PM

மதமாற்றத் தடைச் சட்டம் வேண்டும்: ராஜ்நாத் கருத்து

மதமாற்றம் தொடர்பான பிரச்னைகளை விசாரிப்பதற்கு மதமாற்றத் தடைச் சட்டம் அவசியம். எனவே, அனைத்து அரசியல் கட்சிகளும் அது குறித்து சிந்திக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "மதமாற்ற நடவடிக்கைகளை விசாரிக்க மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். அதுகுறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தை எதிர்பார்க்கின்றன. அவர்கள் அனைவரும் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். எந்த ஓர் அமைச்சரின் கருத்தையும் அரசின் கருத்தாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x