Published : 17 Jul 2016 11:18 AM
Last Updated : 17 Jul 2016 11:18 AM
புனே தங்கச் சட்டை தொழிலதிபர் தத்தா டி.புகேவை அவரது மகனின் நண்பர்களே கொலை செய்ததும் ரூ. ஒன்றரை லட்சத்தை திரும்பத் தராததால் அவர் கொலை செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், புனே மாவட்டம், பிம்ப்ரி-சின்ச்வாத் நகரை சேர்ந்தவர் தொழிலதிபர் தத்தா புகே (48). இவர் கடந்த 2012-ம் ஆண்டில் ரூ.1.27 கோடி மதிப்பில் 3.5 கிலோ எடையுள்ள தங்கச் சட்டையை அணிந்து தோன்றியதன் மூலம் பிரபலம் ஆனார்.
இந்நிலையில் இவர் பிம்ப்ரி-சின்ச்வாத் நகரின் திகி பகுதியில் வியாழக்கிழமை இரவு அவரது மகன் சுபம் (21) கண் எதிரில் அடித்துக் கொல்லப்பட்டார். தத்தா புகே வட்டிக்கு பணம் கொடுப்பது மற்றும் சிட்பண்ட் தொழிலில் ஈடுபட்டு வந்ததால், பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்சினையே கொலைக்கு காரணமாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர்.
இந்நிலையில் சுபம் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விரைவாக செயல்பட்டு 5 இளைஞர்களை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அதுல் மோகித் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பிறந்நாள் விழாவுக்கு வருமாறு ஏமாற்றி அழைத்துச் சென்று தத்தா புகேவை கொலை செய்துள்ளனர். இந்தக் குற்றவாளிகளில் ஒருவருக்கு ரூ.ஒன்றரை லட்சத்தை தத்தா புகே திருப்பித் தராததால் இந்தக் கொலை நடந்துள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT