Last Updated : 26 May, 2017 12:14 PM

 

Published : 26 May 2017 12:14 PM
Last Updated : 26 May 2017 12:14 PM

3 ஆண்டு கால ஆட்சி: நாடு முழுவதும் கொண்டாட பாஜக திட்டம்- அசாமில் பாலத்தை திறந்து வைத்து கொண்டாட்டங்களை துவக்கினார் மோடி

நாட்டிலேயே மிக நீளமான ஆற்றுப்பாலத்தை அசாம் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைத்தார்.

மோடி தலைமையிலான அரசு 4-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கான அடையாளமாக பல்வேறு திட்டங்களுக்கு அசாம் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு இன்று தனது நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை கொண்டாடும் விதமாக அசாம் மாநிலத்தில் பல்வேறு புதிய உட்கட்டமைப்பு திட்டங்கள் திறப்பு மற்றும் சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.

முதலாவதாக நாட்டிலேயே மிக நீளமான ஆற்றுப் பாலமான தோலா – சதியா பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பிரம்ம்புத்திரா நதிக்கு மேல் 9.15 கிலோ மீட்டருக்கு கட்டப்பட்டுள்ளது இந்த பாலம். இதன் மூலம் அசாம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களுக்கு பயணிக்கும் நேரம் 4 மணி நேரமாக குறையும்.

இன்று மட்டும் 5 முக்கியமான நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

’மோடி பெஸ்ட்’ என்ற பெயரில் அடுத்த 20 நாட்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை பாராட்டும் வண்ணம் நாடு முழுவதும் 900 நகரங்களில் கோலாகலமான நிகழ்ச்சிகளுக்கு பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி என்னும் பிம்பம் கூடுதல் மெருகு பெறும் என்று பாரதிய ஜனதா மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x