Published : 04 Nov 2014 11:27 AM
Last Updated : 04 Nov 2014 11:27 AM

தெலங்கானாவுக்கு சத்தீஸ்கர் மின்சாரம்: முதல்வர்கள் ஒப்பந்தம்

தெலங்கானாவில் மின் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க சத்தீஸ்கரில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான தெலங்கானாவின் கோரிக்கையை சத்தீஸ்கர் ஏற்றுக்கொண்டது.

இதையடுத்து இதற்கான ஒப்பந்தம் ராய்ப்பூரில் நேற்று கையெழுத்தானது. சத்தீஷ்கர் முதல்வர் ரமண் சிங், தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் ஆகியோர் முன்னிலையில் இரு மாநிலங்களின் மின்வாரிய முதன்மை செயலாளர்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

தெலங்கானா நிதியமைச்சர் ஈடெல ராஜேந்தர், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x