Last Updated : 04 Jun, 2016 03:04 PM

 

Published : 04 Jun 2016 03:04 PM
Last Updated : 04 Jun 2016 03:04 PM

ஊழல் புகார்: மகாராஷ்டிரா வருவாய் அமைச்சர் ராஜினாமா

ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய மகாராஷ்டிரா மாநில வருவாய் அமைச்சர் ஏக்நாத் கட்சே ராஜினாமா செய்தார். அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் அளித்தார்.

முன்னதாக மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, ஏக்நாத் கட்சேவை தொலைபேசியில் அழைத்துப் பேசினார். கட்சி மேலிட உத்தரவுக்கு கட்டுப்படுமாறு கட்சேவுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்தே கட்சே ராஜினாமா செய்துள்ளார்.

புனேயில் அரசுக்கு சொந்தமான நிலத்தை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சந்தை விலையைவிட பல மடங்கு குறைவான விலைக்கு வாங்கியதாக கட்சே மீது குற்றச்சாட்டு எழுந்தது.

ஊழல் புகாரில் சிக்கிய ஏக்நாத் கட்சேவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று சிவசேனா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

முதல்வர் பட்னவிஸும் உண்மை நிலவரம் குறித்து பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு அறிக்கை அனுப்பியிருந்தார்.

இத்தகைய சூழலில் மகாராஷ்டிரா மாநில வருவாய் அமைச்சர் ஏக்நாத் கட்சே ராஜினாமா செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x