

போயிங் நிறுவனத்திடம் இருந்து, ரூ.6,700 கோடி மதிப்பில், பி81 ரக கடல்சார் உளவு விமானங்களைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் சீனாவின் அத்துமீறலை கண்காணிக்க, இந்திய கடற்படையின் திறனை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் கருதப்படுகிறது.
இதே ரகத்திலான, எட்டு பி81 உளவு விமானங்கள் இந்தியப் பெருங்கடலில் நீர்மூழ்கி கப்பல் களை கண்காணிப்பதற்கான பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. எனினும், கூடுதலாக 4 விமானங் களை போயிங்கிடம் இருந்து இந்தியா வாங்க உள்ளதாக, ராணுவ மற்றும் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘இது, விமான கொள் முதலில் அடுத்தகட்ட நடவடிக்கை தான். மொத்தம், 4 உளவு விமானங்களைப் பெற போயிங் நிறுவனத்துடன் கடந்த புதன் கிழமை இந்தியா கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு, சுமார் ரூ.6,710 கோடி. அடுத்த 3 ஆண்டுகளில் இந்த விமானங்கள் செயல்பாட்டில் இருக்கும்’ என்றார்.
போயிங் நிறுவனத்தின் இந்திய செய்தித் தொடர்பாளர் அம்ரிதா தின்ஷா, எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பலை தாக்கி அழிக்கும் ஏவு கணைகளை பொருத்தும் வசதியும் அதில் உள்ளதாக அவர் குறிப் பிட்டார். அதாவது நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் தொடுக்கப்படும் ரகசிய தாக்குதல்களை சமாளிக் கவும், அத்துமீறலை தடுக்கவும் இந்த வகை விமானங்கள் பயன்படும்.
பல்வேறு நீர்மூழ்கி கப்பல்களின் ரகசிய இயக்கத்தை சீன கடற்படை அவ்வப்போது அத்துமீறி விரிவு படுத்தி வரும் நிலையில், இந்திய கடற்படை தனது கண்காணிப்புத் திறன் மற்றும் நடவடிக்கைகளை கூர்மைப்படுத்தியும், மேம்படுத் தியும் வருகிறது. இந்த சூழலில் போயிங் நிறுவனத்துடன் இந்தியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.