Published : 06 Jun 2017 03:32 PM
Last Updated : 06 Jun 2017 03:32 PM
ரூ.9,000 கோடி வங்கிக் கடன் மோசடி உள்ளிட்ட வழக்குகளில் சிக்கி இந்தியாவிலிருந்து தலைமறைவாகி லண்டனில் இருந்து வரும் விஜய் மல்லையா அன்று இந்தியா, பாகிஸ்தான் போட்டியின் போது பர்மிங்காம் மைதானத்துக்கு வந்து இந்திய அணியின் ஆட்டத்தை கண்டு ரசித்தார்.
அவர் ரிலாக்ஸ்டாக இந்தப் போட்டியை அமர்ந்து கண்டு ரசித்தது கடும் ஊடக விமர்சனங்களுக்கு ஆளானது அவரை எள்ளளவும் பாதிக்கவில்லை.
இந்நிலையில் அவர் தனது ட்விட்டரில்,
“இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நான் கண்டு ரசித்தது குறித்து மிகப்பரவலான பரபரப்பான ஊடக விவகாரமானது. அனைத்துப் போட்டிகளுக்கும் நேரில் வந்து இந்திய அணிக்கு உற்சாகமூட்டுவேன்” என்று மல்லையா தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் லண்டனில் இவர் கைது செய்யப்பட்டு உடனடியாக ஜாமீனில் வெளியே வந்தார். ஜூன் 13-ம் தேதி இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கான விசாரணையை எதிர்கொள்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT