Published : 05 Dec 2013 11:40 AM
Last Updated : 05 Dec 2013 11:40 AM

கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைக்கவும்: பிரதமர்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. ஊழல் குற்றச்சாட்டுகள், விலைவாசி உயர்வு, தெலங்கானா போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்கட்சிகள் அனல் பறக்கும் விவாதங்களைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் வேண்டுகோள்:

முன்னதாக, நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில்:நாடாளுமன்ற அலுவல்கள் சுமுகமாகவும், வேகமாகவும் நடைபெற ஒத்துழைப்பது அனைத்து அரசியல் கட்சிகளின் கடமையாகும் என்றார்.

இரு அவைகளும் ஒத்திவைப்பு:

நாடாளுமன்றம் கூடியவுடன், மக்களவை மற்றும் மாநிலங்களைவில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இரு அவைகளும் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டன. கூட்டத்தொடர் வரும் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x