Published : 04 Apr 2017 02:17 PM
Last Updated : 04 Apr 2017 02:17 PM

தற்கொலைக்கு முன்பு ஃபேஸ்புக்கில் வீடியோவை வெளியிட்ட பெங்களூரு இளைஞர்

23 வயது இளைஞர் ஒருவர் மும்பையில் 19-வது மாடி விடுதி அறையில் இருந்து வெளியே குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

அதற்கு முன்பாக அவர் தனது ஃபேஸ்புக் கணக்கில் 'தற்கொலை செய்து கொள்வது எப்படி?' என்ற வீடியோவை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாந்த்ரா காவல்துறை தரப்பில் கூறும்போது, ''பெங்களூருவைச் சேர்ந்த 23 வயது இளைஞர் அர்ஜூன் பரத்வாஜ். அவர் திங்கட்கிழமை மாலை சுமார் 4.30 மணியளவில் மும்பையில் உள்ள தாஜ் லேண்ட்ஸ் விடுதி அறையில் இருந்து வெளியே குதித்துள்ளார். லீலாவதி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விடுதி நிர்வாகத்தினர் அளித்த தகவலின்படி, திங்கள் மாலை 3 மணிக்கு விடுதிக்கு வந்துள்ளார் அர்ஜூன். சில மணித்துளிகளில் அவர் விடுதி அறையின் கண்ணாடியை உடைத்துக் கீழே குதித்துள்ளார்.

அவரின் அறையில் இருந்து 9 தற்கொலைக் குறிப்புகளைக் கண்டறிந்துள்ளோம். அவை அர்ஜூன் மன அழுத்தத்தில் இருந்ததாகச் சொல்கின்றன'' என்றனர்.

தற்கொலைக்கு முன் ஃபேஸ்புக்கில் வீடியோ

போலீஸாரின் விசாரணைக்குப் பிறகு அர்ஜூனின் ஃபேஸ்புக் பக்கத்தில், ''தற்கொலை செய்துகொள்வது எப்படி?'' என்ற வீடியோ வெளியாகி இருந்தது.

அந்த வீடியோ தற்போது நீக்கப்பட்டுள்ளது.

வீடியோவுக்கு முன்னால், அர்ஜூன் ’இறப்புக்கான ஒரு காட்சி’ என்ற பெயரில் தன் விடுதி அறைக் கண்ணாடி வழியே சூரியன் மறைவதைப் புகைப்படமாக எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

போதைக்கு அடிமையா?

அர்ஜூனின் தற்கொலைக் குறிப்புகள் அவர் போதைக்கு அடிமையானவர் என்றும், அந்த போதை காரணமாகவே மன அழுத்தத்தில் இருந்தார் என்றும் காட்டுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x