Published : 05 Nov 2014 10:29 AM
Last Updated : 05 Nov 2014 10:29 AM
தெலங்கானா சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. மாநிலத்தின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் ஈடெல ராஜேந்தர் தாக்கல் செய்ய உள்ளார்.
நாட்டின் 29-வது மாநிலமாக உதயமான தெலங்கானாவில் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்) ஆட்சியில் உள்ளது. இந்த அரசு மாநிலத்தின் முதல் பட்ஜெட்டை இன்று புதன்கிழமை காலை 11 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறது. நிதியமைச்சர் ஈடெல ராஜேந்தர் 2014-15-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதனை மாநில துணை முதல்வர் ராஜய்யா முன்மொழிய உள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரில் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸை எதிர்கொள்ளும் வியூகத்தையும் டி.ஆர். எஸ். வகுத்துள்ளதாக முதல்வர் சந்திரசேகர ராவ் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT