Published : 04 Jan 2014 09:20 AM
Last Updated : 04 Jan 2014 09:20 AM

ஜி.எஸ்.எல்.வி-டி5 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது - இன்று கவுன்ட்டவுன் தொடக்கம்

முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி-டி5 ராக்கெட், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட இருந்தது.

அந்த ராக்கெட்டில் ஜி-சாட் 14 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அனுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால், கடைசி நேரத்தில் ராக்கெட்டின் 2-வது நிலை இன்ஜினில் திரவ எரிபொருள் கசிவு கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஜி.எஸ்.எல்.வி-டி5 ராக்கெட் மூலம் ஜிசாட் செயற்கைக்கோள், ஜனவரி 5-ல் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

அதன்படி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.18 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி-டி5 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவன் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான 29 மணி நேர கவுன்ட்டவுன் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x