Published : 07 Feb 2014 03:43 PM
Last Updated : 07 Feb 2014 03:43 PM

தெலங்கானா மசோதா தாக்கலுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

நாடாளுமன்றத்தில் தெலங்கானா மசோதாவைத் தாக்கல் செய்ய தடை விதிப்பதற்கு, உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) மறுத்துவிட்டது.

தெலங்கானா விவகாரத்தின் தற்போதைய நிலையில், தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

ஆந்திராவில் இருந்து தெலங்கானாவைப் பிரித்து தனி மாநிலம் உருவாக்க வகை செய்யும் மசோதாவை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய தடை விதிக்கக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹெச்.எல்.தத்து மற்றும் எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது, தற்போதைய நிலையில், தெலங்கானா விவகாரத்தில் தலையிட முடியாது என்று கூறி, அம்மனுக்களை தள்ளுபடி செய்தன.

முன்னதாக, தெலங்கானா மசோதா ஆந்திர சட்டப்பேரவை ஒருமனதாக நிராகரித்ததை தெலங்கானா எதிர்ப்பு மனுதாரர்கள் தரப்பில் நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் தெலங்கானா மசோதாவைத் தாக்கல் செய்ய தடை விதிப்பதற்கு, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்ட போதிலும், இந்த விவகாரத்தை உரிய நேரத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக நீதிபதிகள் தங்கள் உத்தரவின்போது குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x