Published : 03 Nov 2014 02:59 PM
Last Updated : 03 Nov 2014 02:59 PM
வாகா எல்லைத் தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ள நிலையில், தீவிரவாதத்தை இந்தியா - பாகிஸ்தான் கூட்டாக எதிர்கொள்ள வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் அருகே வாகா எல்லை அமைந்துள்ளது. இங்குள்ள இந்திய- பாகிஸ்தான் எல்லைச் சாவடியில் தினந்தோறும் மாலையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதனை பார்ப்பதற்கு இருநாட்டு எல்லையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் கூடுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை மாலை வழக்கம்போல் இருநாட்டு வீரர்களும் கொடி யிறக்கும் நிகழ்ச்சியை நடத்தினர். சிறிது நேரத்தில் பாகிஸ்தான் எல்லை வாகா பகுதியின் வாகனம் நிறுத்தும் இடத்தில் சக்திவாய்ந்த குண்டுவெடித்தது.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், எல்லையில் நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் இரு நாடுகளுக்கும் தீவிரவாதிகள் விடுத்துள்ள சவால். இதை, இந்தியா - பாகிஸ்தான் கூட்டாக எதிர்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT