Published : 29 Jul 2016 10:37 AM
Last Updated : 29 Jul 2016 10:37 AM

வேட்பு மனுவில் வழக்கை மறைத்ததால் பாஜக எம்.பி. பதவி பறிப்பு

தேர்தல் வேட்பு மனுவில் வழக்கு விவரங்களை மறைத்ததால் பாஜக எம்.பி. செஹதி பாஸ்வானின் பதவியை பிஹார் உயர் நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது பிஹார் மாநிலம் சாசாராம் (தனி) தொகுதியில் பாஜக சார்பில் செஹதி பாஸ் வானும் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமாரும் போட்டியிட்டனர். இதில் செஹதி பாஸ்வான் வெற்றி பெற்றார்.

அவர் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தன் மீதான சில கிரிமினல் வழக்கு விவரங்களை மறைத்ததாக புகார்கள் எழுந்தன. இதுதொடர் பாக கங்கா மிஸ்ரா என்பவர் பிஹார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி கிஷோர் குமார் மண்டல் தலைமையிலான அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கியது. வேட்புமனு பிரமாண பத்திரத்தில் கிரிமினல் வழக்குகளை மறைத்ததால் செஹதி பாஸ்வானின் எம்.பி. பதவி ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

“இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன்’’ என்று பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x