Published : 11 Aug 2016 02:58 PM
Last Updated : 11 Aug 2016 02:58 PM
சுதந்திர தின உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பிரதமர் மோடி பொதுமக்களிடம் ஆலோசனை கோரியுள்ளார். இது தொடர்பான அறிவிப்புகள் அரசு இணையதளங்களில் வெளியாகியுள்ளது.
அந்த அறிவிப்பில், "செங்கோட்டையில் ஒய்யாரமான மேடையில் இருந்து ஆற்றப்படும் சுதந்திர தின உரையே இந்திய தேசத்தில் ஓர் ஆண்டின் முக்கியமான உரை. அந்த சுதந்திர தின உரை எப்படி அமைய வேண்டும் என்பதை மக்களிடமே நேரடியாக கருத்து கேட்டு செதுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. கடந்த ஆண்டும் நரேந்திர மோடி இதேபோல் மக்கள் கருத்தைக் கேட்டார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிப்பது எப்படி?
>மைகவ் என்ற இணையதளம் வாயிலாக மக்கள் தங்கள் கருத்துகள், யோசனைகளைத் தெரிவிக்கலாம். அதுதவிர பிரதமர் மோடியின் இணையதளம், மொபைல் அப்ளிகேஷன் வாயிலாகவும் கருத்துகளை பகிரலாம்.
அவ்வாறாக மக்கள் அனுப்பும் சிறந்த கருத்துகள் ஆகஸ்டு 15-ம் தேதி பிரதமர் மோடியின் உரையில் இடம்பெறும்.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றப் பிறகு ஆற்றவிருக்கும் மூன்றாவது சுதந்திர தின உரை இதுவாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT