Published : 23 Feb 2017 09:39 AM
Last Updated : 23 Feb 2017 09:39 AM
உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஜலாவுன், அலகாபாத், ஜான்சி, பதேபூர் உட்பட 12 மாவட்டங்களுக்குட்பட்ட 53 தொகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய மற்றும் வறட்சிப் பகுதியான புந்தேல்கண்ட் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ரேபரேலி மக்களவை தொகுதிக் குட்பட்ட பகுதிகள் இதில் அடங்கும். இந்த முறை சோனியா காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொகுதிகளில் 61 பெண்கள் உட்பட 680 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 84 லட்சம் பெண்கள், 1,032 திருநங்கைகள் உட்பட 1.84 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக அலகாபாத் வடக்கு தொகுதியில் 26 பேரும் குறைந்த பட்சமாக ககா, மஞ்சன்பூர், குந்தா தொகுதிகளில் தலா 6 பேரும் போட்டியிடுகின்றனர்.
கடந்த 2012-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த 53 தொகுதிகளில், சமாஜ்வாதி 24-லும், பகுஜன் சமாஜ் 15-லும், பாஜக 5-லும், காங்கிரஸ் 6-லும் இதர கட்சிகள் 3 தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்தன.
காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரியின் மகளும் இப்போ தைய எம்எல்ஏவுமான ஆராதனா மிஸ்ரா (ராம்பூர் காஸ்) சுயேச்சை எம்எல்ஏவும் அமைச்சருமான ரகுராஜ் பிரதாப் சிங் (எ) ராஜா பையா (குந்தா), பேரவை எதிர்க் கட்சித்தலைவர் கயா சரண் திங்கர் (நரைனி) ஆகியோர் வேட்பாளர்களில் குறிப்பிடத்தக்க வர்கள் ஆவர்.
உத்தரப் பிரதேச சட்டப்பேர வைக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கெனவே 3 கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில் இன்று 4-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அடுத்தபடியாக வரும் 27, மார்ச் 4, 8 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மார்ச் 11-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT