Last Updated : 10 Apr, 2015 08:55 AM

 

Published : 10 Apr 2015 08:55 AM
Last Updated : 10 Apr 2015 08:55 AM

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் வழக்கு கடந்து வந்த பாதை..

1987-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை தலைமையக மாகக் கொண்டு சத்யம் கம்ப்யூட்டர்ஸ் தொடங்கப்பட்டது. 2000 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்ப சேவையில் ஈடுபட்டிருந்த முன்னணி இந்திய நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்தது.

இந்நிறுவனத்தின் லாபத்தை பல ஆண்டுகளாக மிகைப்படுத்திக் காட்டியதாக கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி அதன் நிறுவனரும் அப் போதைய தலைவருமான ராமலிங்க ராஜு தாமாக முன்வந்து தெரிவித்தார்.

இதையடுத்து இந்நிறுவன பங்குதாரர்களில் சிலர் கொடுத்த புகாரின் பேரில் 2009-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி ராமலிங்க ராஜுவை போலீஸார் கைது செய்தனர்.

2009 ஜனவரி 7 :

நிறுவன வரவு-செலவு கணக்கில் முறைகேடு செய்ததாக ராமலிங்க ராஜு தாமாக முன்வந்து தெரிவித்தார்.

2009 ஜனவரி 9 :

ஆந்திர போலீஸாரால் ராமலிங்க ராஜு கைது செய்யப்பட்டார்.

2009 ஜனவரி 10 :

சத்யம் நிறுவன வாரியம் செயல்பட கம்பெனி சட்ட வாரியம் (சிஎல்பி) தடை விதித்தது. தீபக் பரேக், கிரண் கார்னிக் மற்றும் சி.அச்சுதன் ஆகியோர் வாரிய உறுப்பினர்களாக அரசால் நியமிக்கப்பட்டனர்.

2009 ஜனவரி 13 :

இந்த வழக்கை தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம் விசாரிக்க அரசு உத்தரவிட்டது.

2009 பிப்ரவரி 2 :

சத்யம் நிறுவனத்தை வாங்க மஹிந்திரா அண்ட் மஹிந்திரா விருப்பம் தெரிவித்தது.

2009 பிப்ரவரி 5 :

அரசால் நியமிக்கப்பட்ட வாரியம் ஏ.எஸ்.மூர்த்தியை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது.

2009 பிப்ரவரி 11 :

சத்யம் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை விற்பது குறித்து புதிய வாரியம் பரிசீலித்தது.

2009 பிப்ரவரி 17 :

இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப் பட்டது.

2009 மார்ச் 6 :

சத்யம் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை விற்க பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) அனுமதி அளித்தது.

2009 ஏப்ரல் 4 :

முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.

2009 ஏப்ரல் 13 :

சத்யம் நிறுவனத்தை மஹிந்திரா குழுமத்தின் டெக் மஹிந்திரா கைப்பற்றியது.

2009 நவம்பர் :

சிபிஐ கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க ஆந்திர அரசு உத்தரவிட்டது.

2009 நவம்பர் 22 :

2-வது குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.

2010 ஜனவரி 7 :

3-வது குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.

2010 ஆகஸ்ட் 19 :

ராமலிங்க ராஜு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

2010 நவம்பர் 8 :

நீதிபதி பிவிஎல்என் சக்ரவர்த்தி தலைமையில் விசாரணை தொடங்கியது. அப்போது முதல், தினமும் விசாரணை நடைபெற்றது.

2010 நவம்பர் 10 :

கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததால் ராமலிங்க ராஜு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

2011 அக்டோபர் 25 :

விசாரணை நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்தது.

2011 நவம்பர் 2 :

விசாரணை தொடங்கியது.

2011 நவம்பர் 5 :

2-வது முறையாக ராமலிங்க ராஜு ஜாமீனில் விடுதலையானார்.

2014 டிசம்பர் :

விசாரணை முடிந்ததையடுத்து 2015, மார்ச் 9-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

2015 மார்ச் 9 :

ஏப்ரல் 9-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.

2015 ஏப்ரல் 9 :

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது.

ராமலிங்க ராஜு, அவரது சகோதரர் ராம ராஜு ஆகிய இருவருக்கும் தலா ரூ.5.5 கோடி அபராதமும் மற்றவர் களுக்கு தனித்தனியாக ரூ.25 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x