

தெலங்கானா விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தெலங்கானா விவகாரம் மட்டுமே இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. தெலங்கானா தனி மாநிலம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் குழுவின் அறிக்கை மீதும் தெலங்கானா வரைவு மசோதா குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
தெலங்கானா உருவாக்குவது தொடர்பாக பல்வேறு சாத்தியக்கூறுகள் முன்வைக்கப்பட்டு, இதில் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.