Published : 12 Nov 2014 10:00 AM
Last Updated : 12 Nov 2014 10:00 AM
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நேற்று திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோயிலில் லட்ச வில்வ அர்ச்சனை நடைபெற்றது.
திருப்பதியில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் சமேத கபிலேஸ் வரர் கோயில் உள்ளது. இக்கோயி லில் தெலுங்கு கார்த்திகை மாதத்தையொட்டி நேற்று காலை யாகசாலையில் உற்சவ மூர்த்தி களுக்கு லட்ச வில்வ அர்ச்சனை நடைபெற்றது. முன்னதாக மூலவ ருக்கு சுப்ரபாதை சேவை, அபிஷே கம், அர்ச்சனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை லட்ச வில்வ அர்ச்சனை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து இரவு உற்சவர்களின் திருவீதி உலா நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT