Published : 30 Jun 2017 01:15 PM
Last Updated : 30 Jun 2017 01:15 PM
ஸ்ரீநகரில் பிரிவினைவாதிகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால், வெள்ளிக்கிழமை அன்று நகரின் சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தானைச் சேர்ந்த ஹிஸ்புல் முகாஜிதீன் தலைவர் சையத் சலாஹூதீனை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது பிரிவினைவாதிகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து ஸ்ரீநகரின் சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கன்யார், ரெய்னாவர், நோவட்டா, எம்.ஆர்.குஞ்ச் மற்றும் சஃபா கடல் ஆகிய 5 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இது அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இடங்களில் உள்ள கடைகள் மூடப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்து முடங்கியுள்ளது. பதற்றம் மிகுந்த பகுதிகளில் காவல்துறை மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT