Published : 07 Feb 2014 12:34 PM
Last Updated : 07 Feb 2014 12:34 PM

பத்திரிகையாளர்களுக்கான ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

பத்திரிகையாளர்களுக்கான மஜிதியா ஊதிய வாரியத்தின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று செய்தித்தாள் மற்றும் செய்தி நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது, உழைக்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தித்தாள் பணியாளர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.

மஜிதியா ஊதிய வாரிய பரிந்துரைகளுக்கு எதிராக செய்தித்தாள் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை, உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவைப் பிறப்பித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான பெஞ்ச், பத்திரிகையாளர்களுக்கான ஊதியப் பரிந்துரைகளில் சரியான முறையே பின்பற்றப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

மஜிதியா ஊதியக் குழு பரிந்துரைகளை வரும் ஏப்ரல் முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், நவம்பர் 11, 2011-ல் இருந்து மார்ச் 2014 காலக்கட்டத்துக்கான நிலுவைத் தொகையை ஊழியர்களுக்கு 4 தவணைகளில் வழங்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x