Published : 25 Nov 2014 10:22 AM
Last Updated : 25 Nov 2014 10:22 AM

வழக்கறிஞர்களுக்கு புதிய விதிமுறைகள்: பார் கவுன்சில் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

கீழமை மற்றும் உயர் நீதிமன்றங்க ளில் 5 ஆண்டு பணியாற்றினால் தான் உச்ச நீதிமன்றத்தில் பணி யாற்ற முடியும் என்ற பார் கவுன் சில் புதிய விதிமுறைகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து பதில் அளிக்க பார் கவுன்சில்களுக்கு உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அக் ஷய் மணி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்ப தாவது:

நாடாளுமன்றத்தில் இயற்றப் பட்ட வழக்கறிஞர்கள் சட்டப் பிரிவு 30-ன்படி ஒரு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களிலும் வழக்கறிஞராகப் பணியாற்ற உரிமை உள்ளது. இந்த உரி மையை எந்த விதிகளாலும் பறிக்க முடியாது.

5 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பித்தல்

இந்த நிலையில், ‘வழக்கறிஞர் கள் 5 ஆண்டுக்கு ஒருமுறை தங்களது பதிவைப் புதுப்பிக்க வேண்டும். வழக்கறிஞர்கள் சங்கத்தில் கண்டிப்பாக உறுப்பி னராக இருத்தல் வேண்டும். புதிதாக பதிவு செய்யும் வழக்கறிஞர்கள் 2 ஆண்டுகள் கீழமை நீதிமன்றங்களிலும், 3 ஆண்டுகள் உயர் நீதிமன்றத்திலும் பணியாற்றினால்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்ற முடியும்’ என்று அகில இந்திய பார் கவுன்சிலும், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலும் புதிய விதிமுறைகளை உருவாக்கியுள்ளன. வழக்கறி ஞர்கள் சட்டம் அளித்துள்ள உரிமைக்கு எதிரான இந்த விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு இந்த மனுவை விசாரித்தது. விசாரணையை நீதிபதிகள் ஜனவரி 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதற்குள் பதில் அளிக்குமாறு அகில இந்திய பார் கவுன்சில், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x