Last Updated : 02 Sep, 2016 11:07 AM

 

Published : 02 Sep 2016 11:07 AM
Last Updated : 02 Sep 2016 11:07 AM

தீபிகா படுகோன், சோனாக்சி சின்ஹா பெயர்களில் உ.பி.யில் ரேஷன் அட்டை

உத்தரப் பிரதேச மாநிலம், ஃபரூக்காபாத் மாவட்டத்தில் இந்தி நடிகைகள் தீபிகா படுகோன், சோனாக்ஷி சின்ஹா, ஜாக்குலின் பெர்ணான்டஸ், ராணி முகர்ஜி ஆகியோரின் பெயர்களில் ரேஷன் அட்டைகள் இருப்பதும், இந்த அட்டை களுக்கு நீண்ட காலமாக மானிய விலையில் உணவு தானியங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

ஃபரூக்காபாத் மாவட்டத்தின் கயாம்கஞ்ச் தாலுகா, சகாப்கஞ்ச் என்ற கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் இவர்களின் பெயர்களில் ரேஷன் அட்டைகள் உள்ளன. இது தொடர்பாக ரேஷன் பொருள் விநியோகிப்பவருக்கு எதிராக கிராமவாசி ஒருவர் அளித்த புகாரின் பேரில், அவரது முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது.

உணவுப் பொருள் விநி யோகப் பட்டியலில், ஜாக்குலின் கணவர் பெயர் சாதுலால் என்றும், தீபிகாவின் கணவர் ரமேஷ் சந்த் என்றும் கூறப்பட்டுள்ளது. இது போல் ராணி முகர்ஜி, சோனாக் ஷி ஆகியோரின் கணவர் பெயர் கள் முறையே ராம் ஸ்வரூப், ரமேஷ் சந்த் என்று கூறப் பட்டுள்ளது.

இதில் தீபிகா பொதுப் பிரிவை யும் மற்ற மூவரும் ஓபிசி வகுப் பினர் எனவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தர விட்டுள்ளார். குற்றவாளியைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தி யுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x