Published : 06 Oct 2014 11:50 AM
Last Updated : 06 Oct 2014 11:50 AM
காஷ்மீர் எல்லையில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லையோர கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலியாகினர், 26 பேர் படுகாயமடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை தாக்குதலுக்குப் பின்னர் இன்றும் (திங்கள்கிழமை) பூஞ்ச் மாவட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: "பூஞ்ச் மாவட்டத்தில் பிம்பர் கலி பகுதியில் இந்திய நிலைகளை குறிவைத்து இன்று காலை 8.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தியத் தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சண்டை நீடிக்கிறது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT