Last Updated : 30 Jul, 2016 09:52 AM

 

Published : 30 Jul 2016 09:52 AM
Last Updated : 30 Jul 2016 09:52 AM

ஸ்ரீநகரில் பிரிவினைவாத தலைவர்கள் கைது

காஷ்மீரில் கடந்த 8-ம் தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் கமாண்டர் புர்ஹான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து, வன்முறை மற்றும் கல்வீச்சு சம்பவங்கள் நடந்து வருகின்றன. வன்முறையை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் பலர் இறந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீநகரின் நவ்ஹட்டா பகுதியில் உள்ள ஜாமியா மசூதி நோக்கி நேற்று பேரணியாக செல்ல பிரிவினைவாத தலைவர்கள் அழைப்பு விடுத்திருந் தனர். தடையை மீறி நேற்று தங்கள் வீட்டில் இருந்து பேரணி செல்ல முயன்ற சையது அலிஷா கிலானி, மிர்வைஸ் உமர் பாரூக் ஆகியோர் கைது செய்யப்பட்டு, வெவ்வேறு காவல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x