Last Updated : 05 Jan, 2017 11:51 AM

 

Published : 05 Jan 2017 11:51 AM
Last Updated : 05 Jan 2017 11:51 AM

பெங்களூரு பாலியல் துன்புறுத்தல் வழக்கில் 4 பேர் கைது

பெங்களூருவில் தெருவில் நடந்த சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் நான்கு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

பெங்களூருவில் உள்ள கம்மனஹல்லி பகுதியில் புத்தாண்டு இரவு, தெரு ஒன்றில் நடந்து சென்றுக் கொண்டிருந்த பெண்னை வாகனத்தில் பின் தொடர்ந்த இளைஞர்கள் தடுத்து நிறுத்தி பாலியல் துன்புறுத்தல் கொடுத்தனர்.

அவர்களிடமிருந்து தப்பிக்க அந்தப் பெண் குரல் கொடுக்க அவரை கீழே தள்ளிவிட்டு அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்தக் காட்சி அந்த தெருவின் அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியாகியிருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு இதில் சம்பந்தப்பட்ட இளைஞர்களை போலீஸார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் இந்த பாலியல் குற்ற செயல் தொடர்பாக நான்கு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில், "பெங்களூருவில் பெண்னை பின்தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவத்தில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களில் இருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் வாடிக்கையாக செல்லும் ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் உணவுகளை இந்த இளைஞர்கள்தான் அவரது இல்லத்துக்கு சென்று வழங்கியுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

கடந்த ஒருவாரமாகவே அந்த இளைஞர்கள் அந்தப் பெண்னை பின் தொடர்ந்து வந்துள்ளனர். சம்பவதன்று அந்தப் பெண் அதே ஓட்டலில் உணவு சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பியிருக்கிறார் இதனை பயன்படுத்தி அந்தப் பெண்ணுக்கு அந்த இளைஞர்கள் பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளனர். கைது செய்யப்பட்ட பிறரில் ஒருவர் வாகன ஒட்டுனர், மற்றொருவர் கல்லூரி மாணவர் ஆவார்.

சிசிடிவியில் பதிவான காட்சியின் மூலம் குற்றவாளிகள் விரைவாக பிடிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடன் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அடுத்தக்கட்ட விசாரணை நடந்து வருகிறது. பெண் போலீஸார் கொண்ட குழு ஒன்று இதற்காக அமைக்கப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x