Published : 21 Jun 2016 08:59 AM
Last Updated : 21 Jun 2016 08:59 AM
ஆந்திராவின் நெல்லூர், பிரகாசம் மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களில் 24 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அம்மாவட்ட மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
நெல்லூர் மாவட்டத்தில் உள்ள வஞ்சமூரு, துட்டலூரு, வரி குந்தபாடு ஆகிய பகுதிகளிலும், பிரகாசம் மாவட்டத்தில், பாமூரு, பிஎஸ்.புரம், கம்பல திண்ணே, அய்யவாரி பாளையம் ஆகிய பகுதிகளிலும் கடந்த 6 மாதங்களாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை 24-வது முறையாக லேசான அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த பீதியடைந்தனர். தொடர்கதையாகி வரும் இந்த இயற்கை சீற்றத்தால் இரு மாவட்டத்தில் உள்ள பல்வேறு வீடுகள் பலவீனமடைந்துள்ளன. இதனால், இரவு நேரங்களில் வீடுகளுக்குள் படுத்து உறங்குவதற்கு பொதுமக்கள் மிகுந்த தயக்கம் காட்டி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT