Last Updated : 07 Feb, 2014 12:00 AM

 

Published : 07 Feb 2014 12:00 AM
Last Updated : 07 Feb 2014 12:00 AM

ஆம் ஆத்மியில் பீகார் முன்னாள் அமைச்சர்

பீகார் முன்னாள் அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவர்களில் ஒருவருமான பர்வீன் அமானுல்லா, வியாழக்கிழமை ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் வெற்றி பெற்ற இரண்டு முஸ்லிம் பெண்களில் ஒருவர் பர்வீன் அமானுல்லா. அம் மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். மாநில நிர்வாகம் தனக்கு சரிவர ஒத்துழைப்பு தராததே ராஜினாமாவுக்கு காரணம் என பர்வீன் கூறியிருந்தார். அவரை சமாதானப்படுத்த முதல்வர் நிதிஷ்குமார் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து ஆம் ஆத்மியுடன் அவர் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பர்வீன் அக்கட்சியில் இணைந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x