Published : 07 Oct 2014 12:39 PM
Last Updated : 07 Oct 2014 12:39 PM
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து எதிர் மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் பவானி சிங், ஜாமீன் வழங்கினால் ஜெயலலிதா வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லக்கூடும் என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதிட்டு வருகிறார். உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக் கோரி ராம் ஜெத்மலானி வாதிட்டார்.
அவரைத் தொடர்ந்து வாதிட்ட வழக்கறிஞர் பவானி சிங், ஜெயலலிதா மிகவும் சக்தி வாய்ந்த பிரபலர். அவருக்கு, ஜாமீன் வழங்கினால் ஜெயலலிதா வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லக்கூடும். அதனால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. ஜாமீன் வழங்கினால் தண்டனையில் இருந்து தப்பிக்கவும் அவர் முயற்சிக்கலாம் என தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த ராம் ஜெத்மலானி, ஜெயலலிதா எப்போதும் சட்டத்தை மதித்து நடப்பவர், எனவே அவர் நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்க மாட்டார் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT