Published : 12 Apr 2014 09:24 PM
Last Updated : 12 Apr 2014 09:24 PM

மோடிக்கு எதிரான புகார் ஆய்வு செய்யப்படும்: தலைமை தேர்தல் ஆணையர் சம்பத்

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, திருமணத்தை மறைத்த விவகாரத்தில் அவருக்கா எதிரான புகார், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் ஆய்வு செய்யப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் ஏற்பாடுகளை கண்காணிக்க வந்துள்ள சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"நாங்கள் இங்கு புறப்படுவதற்கு முன்பு இந்த புகார் எங்களை வந்தடைந்தது. உச்ச நீதிமன்றத்தில் இதற்கு முன்னரே இத்தகைய விவகாரங்களில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன. எனவே இந்தப் புகார், சம்பந்தபட்ட சட்டம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் விசாரிக்கப்படும்".

இவ்வாறு சம்பத் கூறினார். முன்னதாக காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் மோடி தனது திருமண நிலையை மறைத்தது குறித்து வெள்ளிக் கிழமையன்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். 2002-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரை நடந்த தேர்தல்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மோடி தனது திருமணம் பற்றி குறிப்பிடவில்லை என்றும் கபில் சிபல் கூறியிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x