Published : 19 Aug 2016 03:35 PM
Last Updated : 19 Aug 2016 03:35 PM

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியாவின் அங்கமாகும்: யோகி ஆதித்யநாத்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியாவின் அங்கமாகும் என கருத்து தெரிவித்திருக்கிறார் பாஜக எம்.பி, யோகி ஆதித்யநாத்.

ஜமாத் உத் தாவா இயக்கத்தின் ஹசீப் சயீது அண்மையில் பாகிஸ்தானில் நடத்திய ஒரு பேரணியில் பேசும்போது, "பாகிஸ்தான் அரசு ராணுவ வீரர்களை காஷ்மீருக்கு அனுப்பிவைக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த கோரக்பூர் தொகுதி பாஜக எம்.பி., "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியாவின் அங்கமாகும். பாகிஸ்தான் இந்தியாவுடன் மோத நினைத்தால் அதன் இருப்புக்கு அபாயம் ஏற்படும். இந்தியாவிடம் காஷ்மீர் 4 முறை தோல்வியடைந்துள்ளது" என்றார்.

மேலும், "காஷ்மீர் பிரச்சினைக்கு காங்கிரஸ் கட்சியினரே பொறுப்பாவர். ஒருவேளை பண்டிட் நேருவுக்குப் பதிலாக சர்தார் படேல் பிரதமராகியிருந்தால் காஷ்மீர் பிரச்சினையே எழுந்திருக்காது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விடுதலையடையும் நேரம் வந்துவிட்டது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x