காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: கிருஷ்ண ராஜ சாகர், கபினி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு - குடகில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: கிருஷ்ண ராஜ சாகர், கபினி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு - குடகில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Updated on
2 min read

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் கிருஷ்ண ராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வறண்டு கிடந்த அணைகளின் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளதால் கர்நாடக மற்றும் தமிழக‌ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் குடகு, ஹாசன், ஷிமோகா, உடுப்பி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவ மழை பரவலாக பெய்துவருகிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலைக்காவிரி, பாகமண்டலா, திரிவேணி சங்கமா, மடிக்கேரி ஆகிய இடங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்துவரு வதால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் தங்குமிடம் நீரால் சூழப் பட்டுள்ளதால், பக்தர்கள் நீராட தடை விதிக்கப்ப்பட்டுள்ளது. தலைக் காவிரியை சுற்றியுள்ள பகுதி களில் நேற்று ஒரே நாளில் 25 செ.மீ. மழை பெய்ததால், பாக மண்டலா - அய்யங்கேரி சாலை யில் வெள்ளநீர் புகுந்தது. குடகு மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்துவருவ தால் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தொடர் கனமழை காரணமாக காவிரியின் குறுக்கே கட்டப் பட்டுள்ள கிருஷ்ண ராஜ சாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித் துள்ளது. இதே போல கேரள மாநிலம் வயநாடு மலைப் பகுதி களிலும், மைசூருவிலும் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் கபினி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட் டுள்ளது. இதனால் கபினி அணை யின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நீர்மட்டம் உயர்வு

மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கு நேற்று மாலை 5 மணி நிலவரப்படி நொடிக்கு17 ஆயிரத்து 264 கன அடிநீர் வரத்து உள்ளது. நொடிக்கு 1586 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. 124.8 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 75.62 அடியாக உயர்ந்திருக்கிறது.

இதே போல கடல் மட்டத்தில் இருந்து 2284 அடி உயரமுள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2257 அடியாக உயர்ந்திருக்கிறது. கபினி அணைக்கு நொடிக்கு 16 ஆயிரத்து 700 கன அடி நீர் வரத்து உள்ளது. நொடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழையால் ஹேமாவதி அணைக்கு நொடிக்கு 13 ஆயிரத்து 265 கன அடி நீர் வரத்து உள்ளது.

இதனால் கடல் மட்டத்தில் இருந்து 2922 அடி உயரத்தில் உள்ள ஹேமாவதி அணையின் நீர்மட்டம் 2870 அடியாக உயர்ந்திருக்கிறது. இதே போல கடல் மட்டத்தில் இருந்து 2859 அடி உயரத்தில் உள்ள ஹாரங்கி அணைக்கு நொடிக்கு 6177 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையின் நீர்மட்டம் 2831 அடியாக உயர்ந்திருக்கிறது.

கடந்த சில மாதங்களாக வறண்டு காணப்பட்ட கிருஷ்ண ராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய‌ அணைகளின் நீர்மட்டம் தொடர் மழையின் காரணமாக மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் கர்நாடக மற்றும் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in