Published : 04 May 2017 10:38 AM
Last Updated : 04 May 2017 10:38 AM
பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தின் மீது கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் 7 பேர் உயிரிழந் தனர். எனினும் உரிய முறையில் பதிலடி கொடுத்து விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதிகளை இந்திய வீரர்கள் கொன்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பதான்கோட்டில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே வாகன தணிக்கையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பதான்கோட் மாவட்டத்தில் உள்ள பெர்ஹாம்பூர் சோதனை சாவடி மையத்தில் ஒரு வாகனம் நிற்காமல் சென்றது. அதில் 3 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அந்த வாகனத்தை போலீஸார் துரத்திச் சென்றபோது, பமியால் அருகே மக்கான்பூர் கிராமத்தில் நிறுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வாகனத்தை சோதனையிட்டதில் சந்தேகத்துக்கு இடமான எந்த பொருளும் கிடைக்கவில்லை. எனினும் ஜம்முவில் உள்ள சம்பா வில் இருந்து அந்த வாகனம் திருடப்பட்டு வந்திருப்பதும், போலியான பதிவு எண் அதில் பொருத்தப்பட்டிருந்ததும் விசார ணையில் தெரியவந்தது.
வாகனத்தில் வந்த 3 பேரும் மக்கான்பூர் கிராமத்துக்குள் தப்பிச் சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால் அந்த கிராமத்தில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT