Last Updated : 18 Oct, 2014 03:07 PM

 

Published : 18 Oct 2014 03:07 PM
Last Updated : 18 Oct 2014 03:07 PM

ஜெயலலிதாவுக்கு மீண்டும் இசட் பிளஸ் பாதுகாப்பு: பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு மீண்டும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த செப்டம்பர் 17-ம் தேதி ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா உத்தரவிட்டார். இதனையடுத்து உடனடியாக அவருக்கு அளிக்கப்பட்டிருந்த இசட் பிளஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டது. இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கியும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா இசட் பிளஸ் பாதுகாப்புடன் வந்து இசட் பிளஸ் பாதுகாப்புடனேயே செல்கிறார் என பரப்பன அகரஹார பகுதியில் இருந்த கர்நாடக போலீஸார் பரபரப்பாக பேசிக் கொண்டனர்.

ஜெயலலிதா, பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் இருந்து இந்துஸ்தான் ஏரோனாடிகல்ஸ் லிமிடெட் (ஹெச்.ஏ.எல்) விமான நிலையத்துக்குச் செல்லும் வழி நெடுகிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஜேமர் கருவிகள் பொருத்தப்பட்ட காரில் ஜெயலலிதா விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x