Published : 24 Jan 2017 09:49 AM
Last Updated : 24 Jan 2017 09:49 AM

திருப்பதி வனப் பகுதியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: 2 பேர் கைது, 50 செம்மரங்கள் பறிமுதல்

திருப்பதி சேஷாச்சலம் வனப் பகுதியில் நேற்று போலீஸார் மீது செம்மரக் கடத்தல் கும்பல் கல்வீசித் தாக்கியதால், பதிலுக்கு போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பலர் தப்பியோடிவிட்டனர். ஆனால் 2 பேர் கைது செய்யப்பட்டு, 50 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பதி சேஷாச்சலம் வனப்பகுதியில், ஸ்ரீநிவாச மங்காபுரத்தில் உள்ள ஸ்ரீவாரி மெட்டு பகுதியில் சிலர் செம்மரம் வெட்டுவதாக போலீஸாருக்கு நேற்று அதிகாலை ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். போலீஸாரை கண்டதும் கடத்தல் கும்பல் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு போலீஸார் வானத்தை நோக்கி 2 ரவுண்டு துப்பாகிச்சூடு நடத்தினர். இதற்கு பயந்து பலர் செம்மரங்களைப் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இவர்களில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 50 செம்மரங்களைப் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x