Published : 24 Aug 2016 09:54 AM
Last Updated : 24 Aug 2016 09:54 AM

மகாராஷ்டிராவில் புத்தகப்பை சுமையால் வெகுண்டெழுந்து பத்திரிகையாளர்களை சந்தித்த 7-ம் வகுப்பு மாணவர்கள்

மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த கோரிக்கை



மகாராஷ்டிராவில் பள்ளி புத்தகப் பையின் சுமை அதிகரிப்பால் வெகுண்டெழுந்த 7-ம் வகுப்பு மாணவர்கள் இருவர், பத்திரிகை யாளர்களுக்கு பேட்டியளித் திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி யுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் சந்திர பூரில் உள்ள வித்யா நிகேதன் பள்ளியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவர்கள் இருவர், அங்குள்ள உள்ளூர் பத்திரிகையாளர்கள் மன் றத்துக்குச் சென்றனர். அங்கிருந்த பத்திரிகையாளர்களைச் சந்தித்து தினசரி 5 கிலோ சுமை கொண்ட பாடப்புத்தக பைகளைச் சுமந்து செல்வதால் தாங்க முடியாத வேதனையை சந்தித்து வருவதாக வும், இது தொடர்பாக விவரமாக பேட்டியளிக்க விரும்புவதாகவும் இரு மாணவர்களும் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அவர் களுக்கான பத்திரிகையாளர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய் யப்பட்டது. அதில் மாணவர்கள் கூறியதாவது:

தினசரி பள்ளியில் 8 பாடங் களுக்கான வகுப்பு நடக்கிறது. இதற்காக, 16 புத்தகங்கள், நோட்டுகள், பயிற்சி புத்தகங்களை எடுத்து செல்ல வேண்டியுள்ளது. ஒரு சில நாட்களில் 20 புத்தகங் கள் வரை எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். இதனால் எங்களது பள்ளி புத்தகப் பையின் சுமை 5 முதல் 7 கிலோ வரை அதிகரிக்கிறது. இத்தனை பாரம் கொண்ட பையை 3-வது மாடியில் உள்ள எங்கள் வகுப்பறை வரை எடுத்துச் செல்ல வேண்டும். இதனால் எங்களது முதுகு அதிக மாக வலிக்கிறது. பாடப்புத்தகங் களின் சுமையை குறைக்கும்படி பள்ளி தலைமை ஆசிரியரிடம் பல முறை விண்ணப்பித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

இவ்வாறு இரு மாணவர்கள் கூறினர்.

பள்ளி மாணவர்களின் பாடப் புத்தக சுமையைக் குறைக்கும்படி இந்த ஆண்டின் தொடக்கத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் மும்பை உயர் நீதிமன்ற உத்தரவுபடி மகாராஷ்டிர மாநில அரசும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. மேலும் இந்த விதியை மதிக்காத பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவ்வாறு இருந்தும் பெரும் பாலான பள்ளிகளில் பாடப் புத்தகங் களின் சுமையை குறைக்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை உடனடியாக நடமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இனியும் புத்தக சுமையை குறைக்க பள்ளி நிர்வாகம் முன்வரவில்லை என்றால், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாகவும் அவ்விரு மாணவர்களும் தெரிவித் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x