Published : 21 Feb 2014 04:35 PM
Last Updated : 21 Feb 2014 04:35 PM
நரேந்திர மோடி பிரதமராகக் கூடாது. அவர் பிரதமராவதை தடுக்க பகுஜன் சமாஜ் கட்சி முழு முயற்சி எடுக்கும் என அக்கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி: "மக்களவைத் தேர்தலில் பாஜக ஆட்சியை கைப்பற்றக் கூடாது. மோடி ஆட்சிக்கு வந்தால் மதவாத சக்திகள் ஊக்கம் பெறும். பாஜக நம்பகத்தன்மை அற்ற கட்சி. அக்கட்சி சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருக்கிறது. சிறுபான்மை சமூகத்தினர் மோடி குறித்த அச்சத்தில் இருக்கின்றனர். எனவே மோடி பிரதமராவதை தடுக்க பகுஜன் சமாஜ் கட்சி முழு முயற்சி எடுக்கும்" என்றார்.
ஊழலுக்கு எதிரான 6 மசோத்தக்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த மாயாவதி, "இந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் முன்னரே கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஊழலில் சிக்கித் தவிக்கும் காங்கிரஸ், தனது அடையாளத்தை மக்கள் மத்தியில் மாற்றுவதற்காக இப்போது இந்த மசோதாக்களை கொண்டு வர துடிக்கிறது" என கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT