Last Updated : 13 Jun, 2016 09:02 AM

 

Published : 13 Jun 2016 09:02 AM
Last Updated : 13 Jun 2016 09:02 AM

பிஹார் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் 2 பேர் கைது

பிஹார் மாநிலம் பான்கா மாவட்டத்தில் 2 மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினர் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ‘இன்சாஸ்’ ரக துப்பாக்கி, 120-க்கும் மேற்பட்ட தோட்டாக் கள், கையெறிகுண்டு மற்றும் வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டன.

மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் 131-வது படைப்பிரி வினரும், மாநில காவல்துறை யினரும் இணைந்து, பான்கா மாவட்டம், பிலுவா-சூயா பகுதியில் நேற்று அதிகாலை 3 மணிக்கு நடத்திய தேடுதல் வேட்டையின் போது, 2 மாவோயிஸ்டுகளும் பிடிபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x