Published : 25 Jan 2017 10:40 AM
Last Updated : 25 Jan 2017 10:40 AM
கர்நாடக மாநில அமைச்சர், காங்கிரஸ் மகளிர் அணி தலைவி ஆகிய இருவரும் ரூ.162.6 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 8-ல் பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என திடீரென அறிவித் தார். இதையடுத்து கறுப்புப் பண புழக்கத்தைக் கட்டுப்படுத்த வரு மான வரி, அமலாக்கத் துறை ஆகி யவை நாடு முழுவதும் சோதனை நடத்தி வருகின்றன. கர்நாடகா வில் கடந்த இரு மாதங்களில் நடத் தப்பட்ட சோதனையில் ரூ.1000 கோடிக்கும் அதிகமான கறுப்புப் பணம் பறிமுதல் செய்யப்பட் டுள்ளது.
இந்நிலையில் வருமான வரித் துறை அதிகாரிகள் பெங்களூருவில் உள்ள சிறுதொழில் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோலி மற்றும் அவரது சகோதரர் லக்ஷமன் ஜார்கிஹோலி உள்ளிட்டோரின் வீடுகளில் கடந்த 20-ம் தேதி சோதனை நடத்தினர். இதே போல பெல்காமில் உள்ள சதீஷ் ஜார்கிஹோலியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.
இதுதவிர கர்நாடக அரசில் முக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகள், ஆணைய தலைவர் கள் சிலரின் வீடுகளிலும் கடந்த இரு தினங்களாக சோதனை நடத்தினர்.
இந்நிலையில் மண்டல வருமான வரித்துறையில் செய்தி தொடர் பாளர் அலெக்ஸ் மேத்யூ நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “அமைச்சர் மற்றும் காங்கிரஸ் மகளிர் சங்கத் தலைவி ஒருவ ருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த சில தினங் களாக வருமான வரித்துறை அதி காரிகள் சோதனை நடத்தினார்கள்.
இதில் இருவரது வீடுகளில் இருந்தும் ரூ.41 லட்சம் ரொக்கப் பணமும், 12.8 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. வரு மான வரித்துறையில் சிக்கியுள்ள இருவரும் ரூ.162.6 கோடி அள வுக்கு வருமான வரி கணக்கில் காட்டாத சொத்துகளை வைத் துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. வருமான வரித்துறையில் சிக்கியுள்ள இருவரும் பினாமி பெயரில் சர்க்கரை ஆலை நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது''என குறிப்பிடப்பட்டுள்ளது.
வருமான வரித்துறையிடம் சிக்கியுள்ள அமைச்சர் மற்றும் கர்நாடக காங்கிரஸ் மகளிர் சங்கத் தலைவி ஆகியோரின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படவில்லை. இந்நிலையில், சதீஷ் ஜார்கிஹோலியை அமைச் சரவையில் இருந்து நீக்க வேண்டும் என பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT