கேஜ்ரிவால் புகார் மீது உரிய நடவடிக்கை: ஷிண்டே உறுதி

கேஜ்ரிவால் புகார் மீது உரிய நடவடிக்கை: ஷிண்டே உறுதி
Updated on
1 min read

டெல்லி போலீஸாருக்கு எதிராக துணை ஆளுநரிடம் அம்மாநில முதல்வர் கேஜ்ரிவால் கொடுத்துள்ள புகார் மீது உரிய விசாரணை நடத்தப்படும் என உள்துறை அமைச்சர் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கேஜ்ரிவாலை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறினார். இவ்விகாரம் குறித்து ஏற்கெனவே துணை நிலை ஆளுநர் விசாரித்து வருவதாகவும் இருப்பினும் கேஜ்ரிவால் தன்னிடமும் இப்பிரச்சிமத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார்.

ஐ.பி.எல். சூதாட்ட விசாரணையில் இருந்து தொழிலதிபர் ஒருவரை காப்பாற்றியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு புகார் கூறிய முன்னாள் உள் துறை செயலர் இப்போது பாஜகவில் இணைந்து விட்டார். அதனால் இந்த விவகாரத்தில் கருத்து சொல்வதற்கு இல்லை என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in