Published : 27 Oct 2014 10:45 AM
Last Updated : 27 Oct 2014 10:45 AM
திருவனந்தபுரம் தொகுதியில் சசி தரூர் தூய்மைப் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அதற்கு பிரதமர் மோடி நேற்று முன்தினம் நன்றி தெரிவித்திருந்தார். அவரின் செயல்பாடுகள் ஊக்கமளிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ இணைத்துள்ள தரூர் அதில் பிரதமருக்கு நன்றி தெரிவித் துள்ளார். இதுதொடர்பாக தரூர் கூறியிருப்பதாவது: தூய்மைப் பிரச்சாரத்தை அரசியல் நடவடிக்கையாகப் பார்க்க வில்லை. அரசியல் கடந்த தேச இயக்கமாகவே பார்க்கிறேன். ஜவாஹர்லால் நேரு, அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரும் இதே போன்ற திட்டத்தை முன்னெடுத் திருந்தனர். அதை மறுஆக்கம் செய்ததற்காக மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மோடிக்கு பாராட்டு தெரிவித்ததற்காக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து சசி தரூர் நீக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT